முன்னோர்களின் (ஸலபுக்களின்) அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகுதல்
அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் அதிமதிகம் அறிந்தவர்கள் ஸஹாபாக்களும், அவர்களின் வழி
வந்தவர்களுமே!

அவர்களின் விளக்கத்துடன் குறிப்பாக அகீதாவுடன் தொடர்புடைய விளக்கத்தோடு நமது
விளக்கம் முரண்படுகின்ற போது நாம் அவர்களின் விளக்கத்தையே முன்னிலைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அன்னை ஆயிஷா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ், அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகின்றான் என ஸஹாபாக்களால்
அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

வஹியின் காலத்தில் வாழ்ந்த சிறந்த மக்களால் அறிவிக்கப்படும் இது போன்ற ஹதீஸ்கள்
அவர்களின் வட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்டால் மாத்திரம் நாமும்
ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் நமது அறிவில் குறைவு இருப்பதாக நம்பி அவர்கள் போன்று
நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மத்ஹபைப் புனிதப்படுத்த முயற்சித்தல்
இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகேட்டை இறக்குமதி செய்ய தனித்த ஒரு இமாமைப் முக்கியத்துவப்
படுத்தியதும் ஒரு காரணமாகும். இதில் ஹனபி மத்ஹப் பெரும் பங்காற்றியுள்ளதை மறுக்க
முடியாது. ‘அல்ஹிதாயா’ என்ற முன்னுரையில் இடம் பெறும் ஒரு கருத்தைப்பாருங்கள்.

قال الشامي: وأما سلمان الفارسي، فهو وإن كان أفضل من أبي حنيفة من حيث الصحبة، لكنه لم يكن في العلم، والاجتهاد، ونشر الدين، وتدوين أحكامه كأبي حنيفة. وقد يوجد في المفضول ما لا يوجد
في الفاضل.

ஸல்மான் பாரிஸி (ரழி) அவர்கள் நபித்தோழமையைக் கொண்டு அபூஹனீபாவை விட சிறந்து
விளங்கினாலும், அறிவு, சட்டத்தை அகழ்ந்தெடுத்தல் (இஜ்திஹாத்), மார்க்கத்தைப் பரப்புதல்,
சட்டங்களைப் ஆணவப்படுத்துதல் போன்ற விஷயத்தில் அபூஹனீபாவைப் போன்றில்லை. சிலவேளை,
சிறப்புக்குரியவரிடம் காணப்படாதது, சிறப்புக் குறைந்தவரிடம் காணப்படலாம். (பாக்க:
ஹிதாயாவின் முன்னுரை. பக்கம். 6)

இது ஒரு மத்ஹபு நூலின் முன்னுரையில் பதியப்பட்டுள்ள வாசகங்களாகும். மற்றொரு
வாசகத்தைக் கவனியுங்கள்.

من 3لا يجوزتقليد ما عدا المذاهب الأربعة ولو وافق قول الصحابة والحديث الصحيح ، والآية. فالخارج عن المذاهب الأربعة ضال مضل. ربما أداه ذلك إلى الكفر.لأن الأخذ بظواهر الكتاب ،
أصول الكفر . (حاشية الصاوي على تفسير الجلالينوالسنة  .ஃ10 ط. إحياء التراث العربي.

‘நான்கு மத்ஹப் அல்லாத எந்த ஒரு வழிமுறையையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. அது
ஸஹபாக்களின் தீர்ப்பையும், ஸஹீஹான நபிவழியையும், குர்ஆன் வசனத்தையும் ஒத்ததாக
இருந்தாலும் சரியே! (மத்ஹபையே பற்றிக் கொள்ள வேண்டும்). ஏனெனில் நான்கு மத்ஹபுகளுக்கும்
அப்பாற்பட்டவன் வழிகெட்டவனும், வழிகெடுப்பவனுமாவான். அது சிலவேளை இறை மறுப்பின் பக்கம்
இட்டுச்செல்லலாம். குர்ஆன், மற்றும் ஹதீஸில் வெளிப்படையாக தெரிவதை எடுப்பது (அமுல்
செய்வது) குஃப்ரின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. (ஆதார நூல்: ஹாஷியத்துஸ்ஸாவி
அலல்ஜலாலைன். பாக: 3- பக்கம். 10).

குர்ஆனையும், நபிவழியையும், நபித்தோழர்களின் தீர்ப்பையும் அவமதிக்குமாறு போதனை
செய்யும் மத்ஹபுகளின் சித்தாந்தங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் இன்றும் இந்த
தீர்ப்பே மேலோங்கி இருப்பதைக் காணுகிறோம் .
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்